நிலக்கடலை விதைப் பரிசோதனை தொடர்பாக நாமக்கல் வேளாண்மை அலுவலர்கள் சரஸ்வதி மற்றும் சரண்யா ஆகியோர் கூட்டாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் நிலக்கடலையின் தரத்தை பரிசோதனை செய்து அறிந்து பயன்படுத்த வேண்டும்.
நிலக்கடலை சாகுபடியில் அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும். ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் முளைப்புத்திறன் ஆகியவற்றால் விதையின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதைகளின் தரப்படி நிலக்கடலையின் முளைப்புத் திறன் 70 சதவீதம், ஈரப்பதம் 9 சதவீதம் மற்றும் புறத்தூய்மை 96 சதவீதம் என நிர்ணயிக்கப்படுகிறது.
பொதுவாக விதையின் ஈரப்பதம் அதிகமாக இருப்பின் பூச்சி மற்றும் பூஞ்சான் தாக்குதலுக்கு வழிவகுப்பதுடன் முளைப்புத் திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் விதைப்பரிசோதனை செய்வதற்கு 500 கிராம் அளவிலான நிலக்கடலையினை விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி விதை தரத்தினை அறிய வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் அமைந்துள்ள விதை பரிசோதனை நிலையத்தில் குறைந்த கட்டணத்தில் ஒரு மாதிரிக்கு ரூ.80 என்ற வீதத்தில் விதையின் புறத்தூய்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
Must Read : கொரோனா வைரஸ்... திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முக்கிய அலர்ட்
எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் தரமான விதைகளை உபயோகித்து அதிக மகசூல் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Groundnut, Local News, Namakkal