நாமக்கல் மாவட்டம், மோகனுார் ஒன்றியம், ஆரியூரில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு, அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் அலுவலக உதவியாளராக 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இவர் பணியில் சேரும்போது 8ம் வகுப்பு கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவர் பணியில் சேர்ந்தபோது, போலியான கல்வி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில், அவரது கல்வி சான்றிதழ்களை சரி பார்க்கும் பணியில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
விசாரணையில், அவர் பள்ளிக்கே செல்லவில்லை எனவும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக கல்வி சான்றிதழ் அளித்தது போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கர்ணன், அலுவலக உதவியாளர் ஜெயராமனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார்.
செய்தியாளர் : ரவிச்சந்திரன் ராஜகோபால் - நாமக்கல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Namakkal