நாமக்கல் மாவட்ட பொருளாதாரத்தின் முக்கிய பிரிவாக வேளாண்மைத் தொழில் இருந்து வருகிறது. 70 சதவிகித மக்கள் வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களை செய்து வருகின்றனர். இந்த மாவட்டத்தின் மொத்த பரப்பானது 3,363.35 சதுர கிலோ மீட்டராகும்.
இதில் மொத்த விவசாய பரப்பானது 3.367 இலட்சம் ஹெக்டேர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இங்கே நிலையான வேளாண்மை உற்பத்தி, நீடித்த வேளாண்மையில் உற்பத்தி அதிகரிப்பு, வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தேவையைப் பூர்த்தி செய்தல், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் தேவையைப் பூர்த்தி செய்தல் மற்றும் ஊரக மக்கள் தொகைக்கு வேலை வாய்ப்பினை அளித்தல் ஆகியவையே வேளாண்மைத் துறையின் முக்கிய கொள்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் 2023-2024ஆம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டார். பின்னர் அவர் கூறுகையில், தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி) நாமக்கல் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ.11,273.68 கோடி அளவுக்கு கடனாற்றல் இருப்பதாக மதிப்பீடு செய்துள்ளது.
இது கடந்த நிதி ஆண்டை விட 44.16 சதவீதம் அதிகமாகும். விவசாயத்தில் நீண்ட கால கடன் அளிப்பதற்கான சாத்தியக் கூறுகளை இந்த திட்டம் விளக்குகிறது. அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்திற்கு 2023-24ஆம் ஆண்டுக்கு பயிர் கடன் ரூ.4,961.95 கோடி, விவசாய முதலீட்டு கடன் ரூ.1,238 கோடி, விவசாய கட்டமைப்பு கடன் ரூ.115.34 கோடி, விவசாய இதர கடன்கள் ரூ.136.90 கோடி என விவசாயத்திற்கான மொத்த கடன் மதிப்பீடு 6,452 கோடி ரூபாய் ஆகும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சிறு, குறு நடுத்தர தொழில் கடன் ரூ.3,657.75 கோடி, ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன் ரூ.294.79 கோடி, அடிப்படை கட்டுமான வசதி ரூ.66 கோடி, சுய உதவிக்குழு மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கான கடன் அளவு ரூ.757.80 கோடி என மொத்தம் 11,273.68 கோடி ரூபாய் அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?
விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட இது போன்ற கடன் வசதிகள் உதவும். வேளாண்மையில் எந்திரமயமாக்கல், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க பயன்படும். வங்கிகள் இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Loan, Local News, Namakkal