முகப்பு /செய்தி /மயிலாடுதுறை / இறாலுக்கு லாபகரமான விலை நிர்ணயிக்க அரசுக்கு கோரிக்கை - சீர்காழியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் முடிவு

இறாலுக்கு லாபகரமான விலை நிர்ணயிக்க அரசுக்கு கோரிக்கை - சீர்காழியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் முடிவு

சீர்காழியில் செய்தியாளர்களை சந்தித்த  தமிழ்நாடு இறால் வளர்ப்பு விவசாயிகளின் கூட்டமைப்பின்

சீர்காழியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இறால் வளர்ப்பு விவசாயிகளின் கூட்டமைப்பின்

Tamilnadu Prawn Growers Association | தமிழ்நாடு இறால் வளர்ப்பு விவசாயிகளின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்  சீர்காழியில் நடைபெற்றது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mayiladuthurai, India

மின்சார கட்டணம் குறைப்பு மற்றும் இறாலுக்கு உரிய விலை ஏற்படுத்தி தராவிட்டால் ஓராண்டு இறால் வளர்ப்பை நிறுத்தி வைப்போம் சீர்காழியில் நடந்த தமிழ்நாடு இறால் வளர்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இறால் வளர்ப்பு விவசாயிகளின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழியில் உள்ள தனியார் மண்டபத்தில்  நடைபெற்றது , கூட்டத்தில் கீழ் கண்டன தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டடது. அதில் மத்திய அரசு இறால் தீவன இடுபொருட்களுக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி குறைத்ததற்கு நன்றி தெரிவித்தும் , தீவன உற்பத்தியாளர்கள்  தீவன விலையை குறைக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இன்றைய சூழலில் ஏற்றுமதியாளர்கள் இறால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கினால் மட்டுமே இறால் உற்பத்தியை தொடர முடியும் என்றும் மாநில அரசிடம் மின்சார கட்டணத்தை குறைக்க பல முறை கோரிக்கை வைத்தனர். மின்சார கட்டண குறைப்பு மற்றும்  இறாலுக்கு லாபகரமான விலை நிர்ணய உத்தரவாதம் அரசு அளிக்க வேண்டும் இல்லையென்றால்  ஓர் ஆண்டு இறால் வளர்ப்பு தொழிலை நிறுத்தி வைக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளோம் என அந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Mayiladuthurai, Sirkazhi