மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் குழும காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்துகடந்த 21ம் தேதி அன்று இரவு 11 மணிக்கு வேல்முருகன் என்பவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், கார்த்தி, அருண்குமார், மாதவன், முருகன் ஆகிய 5 பேருடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார்.
அவர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு காரைக்காலுக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை இரும்பு ரோப்பு கொண்டு தாக்கி உள் காயம் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் படகில் இருந்த சுசுகி இன்ஜின், ஜிபிஎஸ், தூண்டில், பேட்டரி ஆகியவற்றை எடுத்து சென்றனர்.
தாக்கப்பட்ட 6 மீனவர்களும் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி சந்தித்து ஆறுதல் தெரிவித்து சம்பவம் குறித்து விசாரித்தார்.
செய்தியாளர்: கிருஷ்ணகுமார் (மயிலாடுதுறை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fisherman, Fishermen crossing the border, Srilanka Army