முகப்பு /செய்தி /மயிலாடுதுறை / முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா..! திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சிறப்பு பூஜை..!

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா..! திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சிறப்பு பூஜை..!

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா..! திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சிறப்பு பூஜை..!

கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது ராசி நட்சத்திரம் சொல்லி அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தினை துர்கா ஸ்டாலின் நடத்தினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mayiladuthurai, India

மயிலாடுதுறை அருகே உலக புகழ் பெற்ற திருக்கடையூர் கோவிலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வயது பூர்த்தியை அடுத்து அவரதுபெயரில் அவரது மனைவி மனைவி துர்கா ஸ்டாலின் பீமரத சாந்தி யாகம் செய்து  வழிபாட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்த தலம் ஆதலால் இது அட்ட விரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இதனால் இங்கு 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வந்து சிறப்பு யாகங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதனால் இங்கு நாள்தோறும் ஏராளமானவர்கள் வந்து சிறப்பு யாகங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு செல்வது வழக்கம். இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு  தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை மரியாதை செய்து வரவேற்றனர். தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற துர்கா ஸ்டாலின் கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ யாக பூஜைகளை செய்தார்.

Read More : “1000 ஆண்டு போராட்டத்தை ஒரே நூற்றாண்டில் துடைத்துவிட முடியாது.. சமூகநீதி போராட்டத்தை தொடர்வோம்...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 பின்னர் கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது ராசி நட்சத்திரம் சொல்லி அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தினை துர்கா ஸ்டாலின் நடத்தினார். ஹோமம் நடைபெற்ற நூற்றுக்கால் மண்டப வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர் கோவிலுக்குள்சென்று அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி மற்றும் அபிராமி அம்பாள் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து  வழிபட்டார். முதல்வர் மனைவி வருகையை ஒட்டி திருக்கடையூர் கோவில் பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

செய்தியாளர் : கிருஷ்ண குமார்

First published:

Tags: CM MK Stalin, Durga Stalin, Mayiladuthurai, MK Stalin