மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தால் வேலைவாய்ப்பு இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த திங்கள் கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 38 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், கிராமத்தில் 3 விவசாயிகள், இன்று நேரடி நெல் விதைப்பு செய்ய உள்ள நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
Must Read : ஓலா கால்டாக்சி புக் செய்த நபர்கள் ஓட்டுநரை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்.. சக கால்டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம்
இதனால், மேல பருத்திக்குடி மற்றும் கீழப் பருத்திக்குடி காலனி தெரு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு 144 (3) பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா உத்தரவிட்டுள்ளார்.
உங்கள் நகரத்திலிருந்து(மயிலாடுதுறை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.