தேசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி... 5 நரிக்குறவ மாணவர்கள் உள்பட 6 பேர் சாதனை...
தேசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி... 5 நரிக்குறவ மாணவர்கள் உள்பட 6 பேர் சாதனை...
யோகா பயிற்சியாளர் மற்றும் சாதனை படைத்த மாணவர்கள்
Mayiladuthurai | தேசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் மயிலாடுதுறையைச் சேர்ந்த உண்டு உறைவிடப்பள்ளியில் படிக்கும் 5 நரிக்குறவ மாணவர்கள் உள்பட 6 பேர் பரிசுகளை வென்று சாதனை படைத்துள்லனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கடந்த மாதம் 30-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 4-வது தேசிய அளவிலான யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப்-2022 போட்டி நடத்தப்பட்டது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 1000 மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில், மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த நரிக்குறவ மாணவர்கள் 14 பேரும், திருஇந்தளூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நீடு அறக்கட்டளை உதவியுடன் படிக்கும் ஒரு நரிக்குறவ மாணவர் உள்ளிட்ட 2 மாணவர்களும் பங்கேற்றனர்.
இதில், 6 பேர் இரு பிரிவுகளில் பரிசு பெற்றுள்ளனர். பல்லவராயன்பேட்டை உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களில், 11 முதல் 13 வயது வரையிலான பிரிவில் 7-ஆம் வகுப்பு மாணவர் நவீன்ராஜ் முதல் பரிசை வென்றார். மேலும், மாணவர்கள் சாமுவேல், சஞ்சனா ஆகியோர் இரண்டாம் பரிசினையும், மகாலட்சுமி என்ற 2-ஆம் வகுப்பு மாணவி மூன்றாம் பரிசையும் வென்றனர்.
திருஇந்தளூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களில், சக்தி மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றனர். மேலும், பல்லவராயன்பேட்டை உண்டு உறைவிடப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி சிறப்பாக பயிற்சி அளித்ததற்காக கேடயம் பெற்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.