கடலூரில் இருந்து குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு
கடலூரில் இருந்து குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு
குற்றாலம் சென்ற பேருந்து சாலை விபத்து
Madurai | மதுரையில் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்து தண்ணீர் லாரியில் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியான நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடலூர் நெல்லிக்குப்பத்தில் இருந்து தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு குளிக்க 18 பேர் தனியார் பேருந்தில் மதுரை நோக்கி வந்துள்ளனர். இந்த வாகனம் ஒத்தக்கடை அருகே வந்து கொண்டிருந்த போது, நெடுஞ்சாலையில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி உருக்குலைந்த நிலையில் பேருந்து ஓட்டுநர் பிரபு மற்றும் பயணி சௌந்தர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மேலும், படுகாயமடைந்த 5 பயணிகளை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடந்த விபத்தால் பெரும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மலை பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்யும் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் இன்று 3-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ள நிலையில் சென்றது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.