அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவெடுத்துள்ளதாக தென்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜனவரி 15ல் நடைபெற உள்ள நிலையில், போட்டியை நடத்தும் கமிட்டி உரிமை தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக சில பிரிவினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சில ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமே போட்டியை நடத்தியது. இந்தாண்டு ஜல்லிகட்டு போட்டியை நடத்தும் உரிமை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அவனியாபுரத்தை சேர்ந்த சங்கத்தினரும், அமைப்பினரும் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தென்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஏ.கே.கண்ணன், "பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இந்த ஆண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவு செய்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் நடத்துவதில் ஆட்சேபனை இல்லை. பிற அமைப்பினரை நடத்த அனுமதித்தால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Avaniyapuram, Local News, Madurai