மதுரை வண்டியூரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கொலை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக மதுரை மாட்டுதாவணி பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி வினோத் என்பவரை, சிறப்பு படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.
அப்போது, ரவுடி வினோத், தன்னிடம் இருந்த அரிவாளால் போலீசாரை தாக்க முயன்றார். இதனையடுத்து போலீசார் தற்காப்புக்காக , வினோத்தின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவரை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Gun shoot, Local News, Madurai