முகப்பு /செய்தி /மதுரை / மதுரையில் ரவுடி மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு

மதுரையில் ரவுடி மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு

மதுரை

மதுரை

மதுரையில் வினோத் என்ற ரவுடி காவல்துறையினரை அரிவாளால் வெட்ட வந்த நிலையில் துப்பாக்கியால் சுட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை வண்டியூரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கொலை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக மதுரை மாட்டுதாவணி பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி வினோத் என்பவரை, சிறப்பு படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.

அப்போது, ரவுடி வினோத், தன்னிடம் இருந்த அரிவாளால் போலீசாரை தாக்க முயன்றார். இதனையடுத்து போலீசார் தற்காப்புக்காக , வினோத்தின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவரை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Crime News, Gun shoot, Local News, Madurai