சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஓபிஎஸ் இருக்கை விவகாரம், ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் செயல்படுவதை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றம் வருகை தந்தனர். பேரவை கூடியதும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் புருஷோத்தனம் மறைவிற்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு கேள்வி நேரம் தொடங்கியது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “திருமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பரிசீலனையில் உள்ளது. திருமங்கலத்தில் முழுமையாக புதிதாக பாதாள சாக்கடை அமைக்க 400 கோடி செலவாகும். தொடர்ந்து அதை பராமரிக்க வருவாய் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். மதுரையில் 500 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது” என்று விளக்கினார். 19 மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓசூர், சிவகாசி ஆகிய இரண்டு மாநகராட்சிகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றும் தகவல் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: KN Nerhu, Madurai, TN Assembly