மதுரையில் அவனியாபுரத்தை தொடர்ந்து பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய 4 மணிக்கு நிறைவடைய வேண்டிய போட்டிகள் 4:50 வரை நடைபெற்றது.
மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்ற இந்த போட்டியில் 806 காளைகளும், 306 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில் 23 காளைகளை அடக்கி தமிழரசன் என்பவர் முதல் பரிசு வென்றார். 19 காளைகளை அடக்கி மணி 2ஆம் இடத்தை பிடித்தார். 15 காளைகளை அடக்கிய ராஜா, தனது நண்பர் அரவிந்த் ராஜ் இறந்த சோகத்தில் பாதியில் வெளியேறினார். இருப்பினும் மூன்றாம் இடத்தை தக்கவைத்தார்.
கருப்பசாமி கோயில் காளைக்கும் மாடுபிடி வீரர் தமிழரசன் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் வென்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் டூவீலர் வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jallikattu, Madurai, Palamedu