மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன் - தமிழரசி தம்பதியினரின் மகனான 4 வயதுடைய சக்தி என்ற சிறுவனை இன்று மதுரை செல்லூர் பகுதியில் உள்ள மனோகரா நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் சேர்த்தனர்.
மாணவர் சேர்க்கையின்போது 4 அடி உயரமுள்ள பிரம்பு கம்பையும், பெற்றோர் உறுதிமொழி மனுவையும் தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். அப்போது, தனது மகன் தவறு செய்தால் இந்த பிரம்பை கொண்டு அடிக்க வேண்டும் எனவும், அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும் உறுதிமொழி பத்திரத்தில் எழுதிகொடுத்தனர்.
ஆசிரியர்கள் கண்டிப்பில்தான் சிறந்த மாணவனை உருவாக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று முன்மாதிரியாக தனது மகனை பள்ளியில் சேர்த்ததாக பெற்றோர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai