மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றி வரும் சமயநல்லூரை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர் சங்கர். இவர் இன்று விடுமுறை என்பதால் திருமங்கலம் அருகே மேல உரப்பனூரில் உள்ள தனது நண்பர் சிவக்குமார் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் இரு சக்கர வாகனத்தில் சங்கர் மற்றும் அவரது நண்பர் சிவகுமார் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமாரின் நண்பர் சிவன்ராஜ் ஆகிய 3 பேரும் திருமங்கலத்தை அடுத்துள்ள செங்குளம் விலக்கிலிருந்து தேசிய நான்கு வழி சாலையை கடக்க முற்பட்டபோது மதுரையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டனர். அதில் மூவரும் பலத்த காயமடைந்தனர்.
சங்கர் இடது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்தார். சிவக்குமார் மற்றும் சிவன்ராஜ் இருவரும் பலத்த காயத்துடன் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Also see... சென்னை புறநகர்ப் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை..!
இச்சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்களைப் பார்க்க வந்த மதுரையைச் சேர்ந்த வாலிபர் விபத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: சிவக்குமார், மதுரை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai, Road accident