முகப்பு /செய்தி /மதுரை / மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் குறித்த தகவல் இல்லை : ஆர்டிஐ கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை பதில்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் குறித்த தகவல் இல்லை : ஆர்டிஐ கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை பதில்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி

Madurai Aiims | மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது துவங்கும் என்ற தகவல் இல்லாததும், கட்டுமான பணிகளை மேற்பார்வையிடும் திட்ட மேலாண்மை நிறுவனம் இன்னும் இறுதி செய்யப்படாததும் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக தெரியவந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது துவங்கும் என்ற தகவல் இல்லாததும், கட்டுமான பணிகளை மேற்பார்வையிடும் திட்ட மேலாண்மை நிறுவனம் இன்னும் இறுதி செய்யப்படாததும் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு 2018 ஜூனில் தான் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பப்பட்டது. அதன் பின்னர் 6 மாதங்கள் கழித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2019-ல் பாராளுமன்ற தேர்தல் நெருங்கிய வேளையில் 27.01.2019 அன்று மதுரை எய்ம்ஸ்க்கு  அடிக்கல் நாட்டப்பட்டது.

அடிக்கல் நாட்டி இரண்டேகால்  வருடங்கள் கழித்து 2021 மார்ச்சில் கடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. கடன் ஒப்பந்தம் கையெழுத்தான உடன் பணி தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னும் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

இதையும் படிங்க : மத்திய அரசு திட்டங்களின் பெயரை அப்படியே தமிழில் பயன்படுத்த தடை கோரிய வழக்கு... மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு...

தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி ஜனவரி 2019-ல் மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டும்போது 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது  செப்டம்பர் 2022க்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

எனவே, இதன் கட்டுமானம் தொடர்பான பல்வேறு கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக ஆர்வலர் பாண்டியராஜா கேட்டிருந்தார். அதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில், "திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்பது சார்ந்த தகவல்கள் இல்லை. அக்டோபர் 2026ல் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடியும்.

இதையும் படிங்க : ஊர்ந்து சென்று பதவியை பெற்றது யார் என்று ஊருக்கே தெரியும் - ஓபிஎஸ் விமர்சனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மொத்த மதிப்பீடான 1977.8 கோடியில், 82 சதவீதமான 1627.7 கோடியை ஜப்பானை சேர்ந்த ஜெய்க்கா நிறுவனம் வழங்கும். 20 சதவீத தொகையான 350.1 கோடியை மத்திய அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில்  வழங்கும். சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகள் உள்பட முதலீட்டுக்கு முந்தைய பணிகள் 92 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதற்காக 12.35 கோடி தொகை விடுவிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Aiims Madurai, Madurai