மதுரை மாவட்டம் தென்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். சுரேஷ்-க்கும் அவரது உறவினரான தீனா என்ற தீனதயாளன் என்பவருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று வேலை முடித்துவிட்டு திருப்பரங்குன்றம் பகுதியில் சுரேஷ் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். ஓம்சக்தி நகர் பகுதியில் வைத்து தீனதயாளன் அவரது நண்பர்கள் விக்னேஷ் மற்றும் இசக்கிராஜா ஆகிய மூவரும் சுரேஷை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சுரேஷை சரிமாரியாக வெட்டிப்படுகொலை செய்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனைக்கண்டு பதறிய அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த திருப்பரங்குன்றம் போலீஸார் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: சிவக்குமார் (மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Madurai, Murder, Tamil News