திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் டிசம்பர் 28ஆம் தேதி முதல் திருவாதிரை திருவிழா தொடங்குகிறது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற உள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா மாணிக்கவாசருக்கு காப்பு கட்டுடன் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்குகிறது.
அந்த நாளன்று மூலவர் சத்யகிரீஸ்வரருக்கு சிறப்பு பூஜை முடிந்து மாணிக்கவாசகர் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி சிவச்சாரியார்களால் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டப்படும். இதனை அடுத்து கோவில் திருவாச்சி மண்டபத்தை மாணிக்கவாசகர் சுற்றிவரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து ஓதுவாரால் திருவெண்பாவை 21 பாடல்கள் பாடப்படும். ஜனவரி 5ல் மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவல நிகழ்ச்சியும் அன்று இரவு ராட்டின திருவிழாவும் நடைபெறும்.
மேலும் முக்கிய நிகழ்வான ஜனவரி6 ஆருத்ர தரிசன விழாவும் நடைபெற உள்ளது.
இதையொட்டி நடராஜர் சிவகாமி அம்மனும் கிரிவலப் பாதையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். இந்நிலையில் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றார்கள்.
செய்தியாளர்: யுவதிகா, மதுரை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Murugan temple, Thiruparankundram