மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்மகும்பலை போலீசார் திவீரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் தத்தனேரி பகுதியில் உள்ள வைகைக்கரை பாலம் அருகே சரவணக்குமார் (29) என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் சரவணக்குமாரை வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் கிடந்த இளைஞரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்மகும்பலை திவீரமாக தேடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Madurai, Murder