மதுரையில் மாநகராட்சியினர் வாகனத்தில் பிடித்துச்சென்ற தனது குட்டியை பின்தொடர்ந்து ஒடிச்சென்ற தாய் குதிரையால் நெகிழ்ச்சி.
மதுரை மாநகர் பகுதியின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள், குதிரைகள் வலம் வருவதால் போக்குவரத்து இடையூறும் விபத்துக்களும் ஏற்படுகின்றன.
இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைந்து உள்ளனர்.இதனால் மதுரை வைகை ஆற்றின் தென்கரை பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த குதிரைகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, குட்டி குதிரை ஒன்றை பிடித்து வாகனத்தில் ஏற்றிய போது, தாய் குதிரை தனது குட்டியை பிரிய மனமின்றி மாநகராட்சி வாகனத்தை மறைத்து நின்றதோடு, வாகனத்தில் ஏற மறுத்து வாகனத்தின் பின்னாலேயே ஓடி சென்ற சம்பவம் காண்போரை நெகிழ செய்தது.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.