மழை மற்றும் பனி காரணமாக பூக்கள் வரத்து குறைந்து மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளன. இதனால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு வழக்கமாக வரும் 4 டன் பூக்களுக்கு பதிலாக தற்போது சுமார் 1 டன் பூக்கள் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பூக்களின் விளைச்சல் குறைவு ஒரு புறம் இருக்க நாளை மறுநாள் இந்த ஆண்டின் கடைசி வளர்பிறை முகூர்த்த நாள் என்பதாலும் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
Also see...திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2022.. காவல் உதவி மையம் திறப்பு..!
வழக்கமாக கிலோ 300 - 600 ரூபாய்க்கு விற்பனையாகும் மல்லிகை இன்று 2000 - 2200 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனையாகும். பிச்சி, முல்லை, கனகாம்பரம் பூக்கள் 600 - 800 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்பனையாகும் சம்மங்கி பூ 150 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்பனையாகும் அரளி 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
பூ - இயல்பான விலை | இன்றைய விலை (கிலோவுக்கு) |
மல்லி - ரூ.300 - 600 | ரூ.2000 - 2200 |
சம்மங்கி - ரூ 50 | ரூ.150 |
பிச்சி -ரூ. 300 | ரூ.600 - 800 |
முல்லை - ரூ.300 | ரூ.600 - 800 |
ப.ரோஸ் - ரூ.50 | ரூ.200 |
அரளி -ரூ. 30 | ரூ.200 |
கனகாம்பரம் - ரூ.300 | ரூ.1500 |
கார்த்திகை பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flower Carpet, Local News, Madurai