மதுரையில் இரவு நேரங்களில் ஜல்லிக்கட்டு மாடுகள் மற்றும் பசுமாடுகள் திருடப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மதுரையில் கடந்த ஒருவாரமாக நள்ளிரவு நேரங்களில் நகரிலும், புறநகர் பகுதிகளிலும் மாடு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில், நகரின் முக்கிய பகுதிகளில் வாகன தணிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று, செல்லூரை அடுத்த களத்து பொட்டலை சேர்ந்த பொன்னம்பலம் என்பவர், தான் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளையை தனது வீட்டின் முன்புறம் கட்டியிருந்தார்.
நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் மினி வேனில் வந்து அந்த ஜல்லிக்கட்டு காளையை மினி வேனில் ஏற்றி சென்றனர். இந்த காட்சிகள் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மாடு திருடு போனது குறித்து பொன்னம்பலம் செல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க | மதுரை காந்தி மியூசியத்தில் பொழுதுபோக்கு பொருட்காட்சி- மக்கள் உற்சாகம்
இதே போல, பொதும்பு பகுதியில் செல்வம் என்பவரின் வீட்டின் முன்புறம் கட்டியிருந்த பசு மாட்டையும் இதே மர்ம கும்பல் மினி வேனில் ஏற்ற முயன்றபோது, மாடு சத்தமிட்டதால் அப்பகுதிவாசிகள் கூச்சலிட்டுள்ளனர். உடனே, மர்ம கும்பல் வேனை எடுத்து தப்பி செல்லும்போது, அதனை பின் தொடர்ந்து வாடிப்பட்டி வரை விரட்டி சென்ற போதும் மர்ம கும்பல் தப்பியது.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மதுரையில் கடந்த 2 நாட்களில் 5-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு மாடுகள், பசுமாடுகள் திருடு போனதால் மாட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jallikattu, Local News, Madurai