2019-2020ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட கலைமாமணி விருதை தகுதியற்ற நபர்கள் பெற்றிருந்தால், அந்த விருது திரும்ப பெறப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
நெல்லை வண்ணாரபேட்டையை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் சமுத்திரம் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், 2019-2020ம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளில் சில தகுதியற்றநபர்கள், கலைமாமணி விருது பெற்று உள்ளனர். தகுதியற்றவர்கள் பெற்ற கலைமாமணி விருதை திரும்ப பெற வேண்டும்.
இனிவரும் காலங்களில் முறையான நடைமுறையை பின்பற்றி தகுதியான நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார் .
இந்த பொது நல மனு நீதிபதிகள் R.மகாதேவன், J.சத்தியநாராயணா பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் 2019-2020ம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை தகுதியற்றநபர்கள், விருது பெற்று உள்ளார்களா? என கண்டறிய தமிழக இயல், இசை, நாடக மன்றம் சார்பில், வல்லுநர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் , ஆய்வு செய்து அறிக்கை சமர்பிப்பார்கள். தகுதியற்ற நபர்கள் கலைமாமணி விருது பெற்றிருந்தால், அந்த விருது திரும்ப பெறப்படும் என தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் விஜயா தாயண்பன் பதில் மனு தாக்கல் செய்து உள்ளதாக கூறி, அந்த பதில் மனுவை நீதிபதிகள் முன் சமர்பித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து , தீர்ப்புக்கான தேதியை குறிப்பிடப்படாமல் வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kalaimamani award, Local News, Madurai, Madurai High Court