மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் கட்டுமானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போதைய விசாரணையின் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பிறகு சூப்பர் சரவணா ஸ்டோர் திறக்கப்பட்டது என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், நகர் திட்டமிடல் (DTCP), மதுரை மாவட்ட தீயணைப்பு அலுவலர் மற்றும் மதுரை மாநகர் போக்குவரத்து உதவி ஆணையர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள, சூப்பர் சரவணா ஸ்டோரில் கடந்த புதன்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. 9 வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தால், பெரும் புகை மூட்டம் உருவாகியது. ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பதறி அடித்து வெளியே வந்தனர். சிலர் மயக்கம் அடைந்தனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் மதுரை மாட்டுதாவணி சூப்பர் சரவணா ஸ்டோர்சில் தீ விபத்து ஏற்பட்டது. எனவே இந்த வழக்கை அவசரவழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் ஹென்றி திபேன் நீதிபதி முரளி சங்கர் முன் முறையிட்டார். இதை தொடர்ந்து இந்த வழக்கு இன்று பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fire accident, Madurai, Madurai High Court, Saravana stores