முகப்பு /செய்தி /மதுரை / மதுரையில் நகை சீட்டு மோசடி.. கடையை பூட்டிவிட்டு எஸ்கேப்.! லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த மக்கள் புலம்பல்!

மதுரையில் நகை சீட்டு மோசடி.. கடையை பூட்டிவிட்டு எஸ்கேப்.! லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த மக்கள் புலம்பல்!

சீட்டு நடத்தி ஏமாற்றிய நகைக்கடை

சீட்டு நடத்தி ஏமாற்றிய நகைக்கடை

Madurai cheating case | மதுரையில் நகை சீட்டு திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களிடம் 10 லட்சம் வரை ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நகைக்கடை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரையில் நகை சீட்டு திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களிடம் 10 லட்சம் வரை ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நகைக்கடை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மேலமாசி வீதியில் ஶ்ரீ சுபம் ஜீவல்லரி எனும் பெயரில் கார்த்திக் (45) என்பவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் இவர் துவங்கிய நகைச்சீட்டு திட்டத்தின் மூலம், நகைக்கான தொகைக்கு ஏற்ப மாதம்தோறும் தவணை முறையில் பணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் நகை பெற்று வந்துள்ளனர்.

இந்த நகைச்சீட்டு திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கான திட்டத்தில் 10 மாதங்களுக்கான தொகையை மட்டும் வாடிக்கையாளர் செலுத்தினால் போதும் மீதமுள்ள இரண்டு மாத தொகைகையை செலுத்தாமலேயே நகையை பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய சலுகையை சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளார். மேலும், பணத்துக்கு பதிலாக பழையை நகைகளை கொடுத்தும் புதிய நகைகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் மதுரையின் நகர் மற்றும் புறநகர் பகுதிகள் மட்டுமல்லாது, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த பலரும் நகைச்சீட்டு திட்டத்தில் வாடிக்கையாளர்களாக இணைந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அவரது கடை அடைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த வாடிக்கையாளர்கள் விசாரித்த போது அவர் கடைக்கான வாடகையை கூட சில மாதங்களாக செலுத்தாமல் இருந்ததாகவும், திடீரென கடையை காலி செய்து சென்று விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் திடீர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கார்த்திகை தேடி வருகின்றனர். இதுவரை 7 வாடிக்கையாளர்கள் அளித்துள்ள புகாரின்படி 11 பவுனுக்கு மேல் பழைய நகைகள், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் என மொத்தமாக சுமார் 10 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் எவ்வளவு பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் விசாரித்து வருவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Cheating, Crime News, Local News, Madurai