மதுரையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக பட்டாசுகள் வெடித்தும், கேக்குகளை வெட்டியும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கூறியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் முதல் முறையாக காவல்துறை சார்பாக மதுரை, கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலை அருகே நூற்றுக்கும் ஏற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மக்களுடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி சுமார் 12 மணி அளவில் காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் புத்தாண்டை கொண்டாட்டம் நடைபெறுவதாக இருந்தது. கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் விதமாக மக்கள் பல பேர் கூடி இருந்தனர்.
இதையும் படிங்க : புத்தாண்டை முன்னிட்டு மதுரை மல்லி ரூ.1800க்கு விற்பனை..
இதற்கிடையில், புத்தாண்டை முன்னிட்டு இளைஞர்கள் பைக் ரைஸ் போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோரிப்பாளையம் பகுதியில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டனர். அவர்களை அங்குள்ள காவல்துறையினர் மடக்கி பிடித்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவுரை கூறினர்.
அதன்பேரில் காவல்துறையின் உயர் அதிகாரியான வனிதா தலைமையில் சுமார் 12 மணியளவில் பொதுமக்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் காவல் துறையுடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்வித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பின்பு உயர் அதிகாரியான செந்தில்குமார் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினார். பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை பிடித்து காவல்துறை சார்பாக நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடச் செய்தது அங்குள்ள மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : யுவதிகா - மதுரை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai