மதுரையின் அடையாளமான ஏவி பாலத்தின் 137வது பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கிய கொண்டாடிய சமூக ஆர்வலர்கள், சேதமடைந்த பாலத்தின் பகுதியை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் கோரிப்பாளையம் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்திற்கு இன்று (டிச.8) 137வது பிறந்தநாள் என்பதால், வைகை நதி மக்கள் இயக்கத்தை சார்ந்த சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
பின்னர், பாலத்தின் இருபுறத்தில் தூய்மை பணி மேற்கொண்டவர்கள்,நூறாண்டுகளைக் கடந்த ஆல்பர்ட் விக்டர் பாலத்தின் சேதமடைந்துள்ள கண் பகுதிகளை அரசு சீரமைத்தும், அதன் ஸ்திர தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்றும் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai