பெரியார் பேருந்து நிலையம் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை... மதுரையில் பரபரப்பு..
பெரியார் பேருந்து நிலையம் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை... மதுரையில் பரபரப்பு..
கொலை நடந்த மதுரை பெரியார் பஸ் நிலையம்
Madurai : சேலம் மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆகி வெளியே வந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேலவாசல் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெபமணிக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் மீது இரண்டு கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட மொத்தம் 23 வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 25.04.22 அன்று மதுரை ஹயத்தான் ரோடு பகுதியில் உள்ள ஒரு பால் கடையில் கத்தியை காட்டி மிரட்டி பால் கேட்டமைக்காக கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு அதன் பின்பு குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டு அந்த குண்டாஸ் வழக்கு நிராகரிக்கப்பட்டு கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு சேலம் மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்துள்ளார்.
இந்த நிலையில் பெரியார் பேருந்து நிலையம் மேலவாசல் அருகில் நேற்றிரவு அவர் சென்று கொண்டிருந்த போது மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
இச்சம்பவம் குறித்து திடீர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெபமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் மட்டும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திறகு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பெரியார் பஸ் நிலையம் அருகே இக்கொலை சம்பவம் நடந்துள்ளது. அதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.