மதுரை எம்.எஸ் ஆம்புலன்ஸ் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கும் ராம்குமார் என்பவர் அவரது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த சூழலில் ராம்குமாரும் அவரது நண்பர் கணேசனும் இணைந்து நேற்று இரவு மது அருந்தி விட்டு ஆம்புலன்ஸ் சைரனை ஒலிக்க விட்டபடியே கீழவாசல் சாலை சந்திப்பு அருகே சுற்றிக்கொண்டே இருந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கடந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.
ஆம்புலன்சின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்ததால் அங்கு பணியிலிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆம்புலன்சை மடக்கி நிறுத்தி டிரைவர் ராம்குமாரிடம் விசாரணை நடத்தினார்.
ராம்குமாரின் மனைவி கீழவாசல் பகுதியில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வருவதாகவும், மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் இருவரும் பிரிந்துள்ள நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் ஒலியெழுப்பி அவரை கடைக்கு வெளியே வரவழைத்து சமாதானம் செய்ய திட்டமிட்டு இவ்வாறு ஆம்புலன்சில் சுற்றிக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது.
குடி போதையில் ஆம்புலன்சை இயக்கி வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய ராம்குமார் மற்றும் நோயாளி போல ஆம்புலன்சில் படுத்துக் கொண்டு போலீசாரை ஏமாற்ற முயன்ற அவரது நண்பர் கணேசன் ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று இருவரிடமும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்து, இனி ஆம்புலன்ஸ் ஓட்டக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.