விருதுநகர் என்ஜிஓ காலனி பகுதிகளில் பழைய மின் கம்பிகள் மாற்றும் பணி நடைபெறுவதால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை என்.ஜி.ஓ. காலனி கிழக்கு மற்றும் மேற்கு, மீனாட்சிபுரம், சத்திர ரெட்டியபட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதனால், குடியிருப்பு வாசிகள் மற்றும் பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக இருக்கும்படி மின்வாரியம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.