விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மாரியம்மன், காளியம்மன் கோவிலில் நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் திருநங்கைகள் உட்பட 480 பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் பூக்குழியில் இறங்கி தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.
சாத்தூரில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக பூக்குழி திருவிழா ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் பங்குனி மாத திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் மற்றும் காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.மேலும் சாத்தூரில் முக்கிய வீதிகளில் 7 நாட்களாக சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
இன்று காலை பக்தர்கள் 1008 பால்குடம் மற்றும் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர். இந்த நிலையில் பங்குனி பொங்களின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்த பூக்குழி திருவிழாவில் சுமார் 480 பக்தர்கள் காளியம்மன் கோவிலுக்கு எதிராக அமைக்கப்பட்டு இருந்த பூக்குழியில் இறங்கி பத்தி பரவசத்துடன் தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர்.
இந்த பூக்குழி திருவிழாவை சாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு சாத்தூரின் முக்கிய வீதிகளில் சிசிடிவி கேமரா மூலம் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் இத்திருவிழாவிற்கு 100க்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.