வெள்ளத்தில் மிதக்கும் வீடு தொழில்நுட்பம் கண்டுபிடித்த விருதுநகரை சேர்ந்த சிறுமிக்கு பிரதமர்
மோடி பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கர் விருதை வழங்கி பாராட்டினார்.
விருதுநகரைச் சேர்ந்த நரேஷ் குமார் - சித்ரா தம்பதியரின் மகள் விஷாலினி. 2-ம் வகுப்பு பயிலும் 7 வயது மாணவியான விஷாலினி வெள்ளத்தில் மிதக்கும் தானியங்கி வசதியுடன் கூடிய வீட்டிற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளார்.
இதன்மூலம் வெள்ளம் பேரிடர் காலங்களில் மக்கள் நீரில் மூழ்காமல் தங்களைத் தற்காத்துக்கொள்ளளும் வகையில் வீடு வடிவமைக்கலாம். விஷாலினியின் கண்டுபிடிப்பை பாராட்டி மத்திய அரசு பிரதான் மந்திரி ராஜ்ய புரஸ்கார் விருதை அறிவித்தது. டெல்லியிலிருந்து காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி மாணவிக்கு விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதன் ரெட்டி மற்றும் மாணவியின் தந்தை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விருது பெற்ற மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் , பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியோர் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.