விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மின் கோட்டத்தில் உள்ள ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் மின் கம்பங்கள் பழுதடைந்து உள்ளதால் பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணமாக நாளை (13.04.2022) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் மின் கம்பம் பழுது அடைந்துள்ளது. இதனால் ஊழியர்கள் பணியாற்றுவதில் சிக்கல் நீடித்து வந்தது. ஆகவே பழுதடைந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டுமென ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அக்கோரிக்கையின் பேரில் இ்ந்த மின்கம்பம் மாற்றும் பணியும், மின் பராமரிப்பு பணிகளும் நாளை (13.04.2022 - புதன்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலங்குளம், ராஜாபட்டி ஆகிய இடங்களில் மின் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவலை செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
இதனால் குடியிருப்பு வாசிகள், வணிக தொழில் நிறுவனங்கள் முன் எச்சரிக்கையாக இருக்கும்படி மின்வாரியம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.