விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அக்னிச்சட்டி எடுத்தும் பறவைக் காவடி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில் உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி அம்மன் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார். பெண் பக்தர்கள் விழா தொடங்கிய முதல் நாள் இரவு குடங்களில் தண்ணீர் சேகரித்து கொடிமரத்தில் ஊற்றி வழிபட்டனர்.
விருதுநகர் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்கள் அதிகளவில் பங்கேற்றனர்.பெண்கள் கோயில் முன்பாக பொங்கலிட்டு வழிபட்டனர். விரதமிருந்த பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதோடு கரும்பு தொட்டி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் பக்தர்கள் பறவைக் காவடி எடுத்தும் 1,621 அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி விருதுநகர் முழுவதும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. விழாவையொட்டி உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.