நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி
விருதுநகர் மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியில் தேர்தல் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு அவர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமின்றி சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் இயந்திரங்களில் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் மற்றும் அவர்களின் பெயர்கள் வரிசைப்படுத்தி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் சரி பார்த்தல் மற்றும் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து வேட்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் வேட்பாளர் முன்னிலையிலேயே வாக்குப்பதிவு எந்திரம் மூடி சீல் வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.