விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வெள்ளையாபுரம் ஊராட்சியில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து உலக தண்ணீர் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ஊராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஜல் ஜீவன் இயக்கம் மூலம் ஊரக பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100% குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வெள்ளையாபுரம் ஊராட்சியில் உலக தண்ணீர் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வெள்ளையாபுரம் அரசுப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுடன் தண்ணீர் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். மேலும் பள்ளி வளாகத்தில் மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நட்டார். அதனை தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் நடைபெற்று வரும் கண்மாய் தூர்வாறுதல், மழை நீர் சேமிப்பு தொட்டி அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாதரெட்டி ஆய்வுசெய்து வளர்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது கோட்டாட்சியர் கல்யாண்குமார், வட்டாட்சியர் அறிவழகன் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.