விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நரிக்குடி மற்றும் கட்டனூர் ஆற்றுப் பகுதிகளில் சட்டவிரோதமாக லாரி மற்றும் மாட்டு வண்டியில் ஆற்று மணலை ஏற்றி சென்ற 5 நபர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நரிக்குடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சார்பு காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் சாலை இலுப்பைக்குளம் - உலக்குடி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உலக்குடி நோக்கி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது லாரியில் அரசு அனுமதியின்றி சுமார் 3 யூனிட் மணல் இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து திருச்சுழி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான நாகூர்கனி, ஜோதிபாசு, சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த லாரியை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் நரிக்குடி அருகே கட்டனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக ஆற்றுமணல் அள்ளப்பட்டு வருவதாக கட்டனூர் காவல் நிலையத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்தன.
இந்த நிலையில் கட்டனூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் பாபு தலைமையிலான போலீசார் கட்டனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது உச்சனேந்தல்-P.வாகைக்குளம் செல்லும் சாலை அருகேயுள்ள பகுதியில் ஆற்றுமணல் அள்ளிவந்த இரண்டு மாட்டுவண்டிகளை நிறுத்தி சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி கிருதுமால் ஆற்றில் திருட்டுத்தனமாக ஆற்றுமணல் அள்ளி வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் மாட்டு வண்டிகளுடன் அரை யூனிட் ஆற்றுமணலையும் பறிமுதல் செய்த கட்டனூர் போலீசார் அதனை காவல் நிலையம் கொண்டு வந்தனர்.இதனையடுத்து கிருதுமால் ஆற்றில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் ஆற்றுமணல் அள்ளிவந்த சிவகங்கை மாவட்டம் S.வாகைக்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(29), அருள்குமார்(21) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த கட்டனூர் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.மேலும் இந்த ஆற்றுமணல் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.