விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஸ்ரீபூமிநாதசுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சுழியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீபூமிநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீதிருமேனிநாதர் துணைமாலையம்மனாக சுவாமியும், அம்பாளும் அருள்பாலிக்கின்றனர். இதனிடையே இக்கோவிலில் கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உற்சவத் தேர்த்திருவிழா தொடங்கியது.
நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமியும் அம்பாளும் திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதையடுத்து மார்ச் 16ஆம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்குத்தொடங்கி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
அப்போது அர்ச்சகர்கள், திருமந்திரத்துடன் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது தம்பதி சமேதராக திருமேனிநாதர் துணைமாலையம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான உள்ளூர் வெளியூர் பக்தர்கள், பக்தியுடன் நேரில் வழிபட்டனர்.
செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.