விருதுநகர் அருகே திருவள்ளுவர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பக்தர்கள் இன்றி கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
திருவள்ளுவருக்கு சிறப்பு பூஜை:-
அருப்புக்கோட்டை அருகே உள்ள பெ. புதுப்பட்டி கிராமத்தில் 1929 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான திருவள்ளுவர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருவள்ளுவர் தினத்தையொட்டி வள்ளுவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், அய்யன் திருவள்ளுவருக்கு பக்தர்கள் இன்றி சிறப்பு பூஜைகள், அபிஷேக , ஆராதனைகள் நடைபெற்றன.
வெறிச்சோடிய கோயில் வளாகம்:-
வரும் மாசி மாதம் திருவள்ளுவர் மறைந்த தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவள்ளுவர் கோயில் திருவிழா நடைபெறாமல் இருப்பதாக கிராம மக்கள், பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்தாண்டு திருவிழா நடத்த அனுமதி தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்:அ.மணிகண்டன்,
விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.