விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருத்தேர் வீதி உலா புளியம்பட்டியில் உள்ள கோவிலில் இருந்து துவங்கி விருதுநகர் ரோடு, பெரிய புளியம்பட்டி காந்தி மைதானம், வேலாயுதபுரம் உள்ளிட்ட தேரோடும் வீதிகள் வழியாக மீண்டும் கோவிலில் சென்று நிறைவுற்றது. முன்னதாக திமுக மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் கேகேஎஸ்எஸ்ஆர்ஆர்.ரமேஷ் திருத்தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார்.
திருத்தேரில் எழுந்தருளிய அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மனை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டு மகிழ்ந்தனர். இந்த திருத்தேர் வீதி உலா நிகழ்ச்சியில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.