விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரில் அருள்மிகு எக்கலாதேவி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைக்குழந்தைகளுடன் ஊர்வலமாக வந்து தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
ராஜபாளையம் அருகே சேத்தூரில் தேவர் பொது பண்டுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஏக்கலா தேவி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பொங்கலை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு 8 நாட்கள் திருவிழா நடைபெற்றது. இன்று 9 வது நாள் திருவிழா பூக்குழி திருவிழாவாக நடத்தப்பட்டது.
காலையிலேயே தீக்குண்டத்தில் தீ வளர்க்கப்பட்டு ஏராளமான பெண்கள் எண்ணெய் ஊற்றி வழிபாடு செய்தனர். அருள்மிகு எக்கலாதேவி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். சக்கரத்தின் பின்புறம் தீ மிதிக்கக் கூடிய நூற்றுக்கணக்கான பக்தர்கள், முளைப்பாரி, ஆயிரம் கண் பானை, பால்குடம் எடுத்த பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வல முடிவில் கோவில் முன்பு வளர்க்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.
500க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் கைக்குழந்தைகளுடன் தீ மிதித்தனர். இவ்விழாவில் உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.