விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியிலுள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் தங்களது புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினார். இக்கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
இந்தக் கண்காட்சியில், பள்ளியில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள், தங்கள் ஆசிரியர்கள் உதவியுடன் வடிவமைத்த அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். நிகழ்ச்சியின்போது, வாழ்வியல் சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அவற்றின் தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்பாடு குறித்தும் மாணவ, மாணவியர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.
கண்காட்சியில் மொத்தம் 48 அறிவியல் உயிரியல் மாதிரி வடிவங்கள் மாணவ, மாணவியரால் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. இக்கண்காட்சியை சுற்றுவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்தும் நேரில் வந்து மாணவ, மாணவியர் பார்வையிட்டு தங்களது அறிவியல் அறிவை மேம்படுத்திக் கொண்டனர்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்.
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.