உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நீர்வளத்தைக் காக்கவும், அதனைப் பெருக்குவது குறித்த விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் நோக்கில் ஐ.நா சபை மூலம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் வரும் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில் மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இந்த பேரணியை கோவிலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிசங்கர் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இதில் 50-க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இவ்விழிப்புணர்வு பேரணி, நீரில்லா உலகத்தைப் பற்றியும், நீரின் முக்கியத்துவம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது. கோவிலாங்குளம் கிராமத்தில் மக்களிடையே இப்பேரணி மூலம் தண்ணீர் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்தப் பேரணியின் இறுதியில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டதோடு பள்ளியை சுற்றி உள்ள கண்மாய் பகுதிகளில் விதை பந்துகளை பள்ளி மாணவர்கள் தூவினர்.
செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.