வைகுண்ட ஏகாதிசி: சொர்க்கவாசல் திறப்பு:-
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள வெங்கடாசலபதி கோயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்றது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா கடந்த ஜனவரி-3ந்தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. பகல் பத்து உற்சவத்தில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. அப்போது பெருமாள் ஆழ்வார்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று காலை 4.30 மணி முதல் நடைபெற்றது.
பக்தர்கள் தரிசனம்:-
சன்னதியிலிருந்து பூதேவி ஸ்ரீதேவி சமேதராக அருள்பாலித்த சாமி கோவிலில் அமைந்துள்ள சொர்க்கவாசல் வழியாக மாடவீதிகளை சுற்றி வந்து சொர்க்கவாசல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சுமார் 2 மணி நேரம் பக்தர்கள் வேத பாராயணங்கள் பாடினர். இதில் திரளான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.