விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மானூர்,இருஞ்சிறை கிராமத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் எடுத்தும் நேர்த்திக் கடனை செலுத்தினர்.உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மானூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் இருஞ்சிறை கிராமத்தில் உள்ள ஸ்ரீ முருகன் திருக்கோயிலில் மூலவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன.
பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து மூலவர் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தும் பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இவ்விழாவையொட்டி உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.