அருப்புக்கோட்டை லட்சுமி நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய புகையிலை பொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக நகர் காவல் நிலைய போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.இதனையடுத்து நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் காந்திநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படியான வகையில், கையில் பெரிய பையோடு சுற்றிக்கொண்டிருந்த ராமகிருஷ்ணன்(54) என்பவரை பிடித்து விசாரித்ததில் அவர் கடைகளுக்கு புகையிலை பொருட்கள் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.மேலும் லட்சுமிநகரில் உள்ள ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்த போது அங்கு சட்டவிரோதமாக சுமார் 56 கிலோ எடை கொண்டரூ1,00,000 மதிப்புடைய புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ராமகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.