விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தீப்பெட்டி மூலப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும், மூடிக்கிடக்கும் தொழிற்சாலையால் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர் நலன் காக்கவும் தமிழ்நாடு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் மற்றும் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வடக்கு ரத வீதியில் தமிழ்நாடு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் மற்றும் சிபிஎம் சார்பில் தீப்பெட்டி மூலப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும், மூடிக்கிடக்கும் தொழிற்சாலையால் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர் நலன் காக்கவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தீப்பெட்டி உற்பத்தி மூலம் பொருட்கள் கடுமையான விலையேற்றம் அடைந்ததாலும் தீப்பெட்டி பண்டல் கொள்முதல் விலை அதிகரிக்க வாடிக்கையாளர்கள் மறுப்பதாலும் தீப்பெட்டி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுவதுடன் உற்பத்தி செய்யப்பட்ட தீப்பெட்டி பண்டல்கள் அதிக அளவில் தேக்கமடைந்து உள்ளது.
இதனால் கடந்த 10ம் தேதி முதல் 11 நாட்கள் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சுமார் 6 லட்சம் தீப்பெட்டித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி உயர்ந்து கொண்டே இருக்கும் பெட்ரோல் டீசல் விலையையும் தீப்பெட்டி மூலம் பொருட்களின் விலையையும் கட்டுபடுத்த வேண்டும் என்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தீப்பெட்டித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்கவும் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.