விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியினை நகர்மன்றத் தலைவர் துவக்கி வைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
தமிழகத்தில் தற்போது 12 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அருப்புக்கோட்டையில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியிணை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தொடங்கி வைத்தார்.
சொக்கலிங்கபுரம் மற்றும் திருநகரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை தொக்கி வைத்த நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, தடுப்பூசி போடும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணிவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும் இந்த முகாமில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், நகர் நல அலுவலர் ராஜநந்தினி, நகர் நல மருத்துவர் (பொறுப்பு) ஜெயபிரதாபன், வட்டார மருத்துவ அலுவலர் சஞ்சய்பாண்டி மற்றும் சுகாதாரதுறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.