விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மின்வாரியம் சார்பில் விவசாயிகளுடன் காணொலியில் முதல்வர்
ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 201 விவசாயிகள் நேரில் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சேர்ந்த விவசாயிகளுக்கு புதிதாக மின்சாரம் வழங்கிய திட்டம் குறித்து விவசாயிகள் கலந்துரையாடிய நிகழ்ச்சிக்கு காணொலிமூலம் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அருப்புக்கோட்டை நகர்மன்றத் ததலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், ஒன்றியக்குழுத்தலைவர் சசிகலா பொன்ராஜ் , அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் இரா.கண்ணன்,உதவி செயற்பொறியாளர் பத்மநாபன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மின்வாரிய கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளான அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, ஆகிய பகுதிகளில் புதிதாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில் திமுக அரசு பதவிக்கு வந்தது முதலாக ஒரு லட்சம் புதிய விவசாய மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பதில் மகிழ்ச்சியடைவதாகக்கூறிய அவர், விவசாயம் சார்ந்த நவீன தொழில்நுட்பங்கள், திட்டங்கள், கருவிகள், மாணியங்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் இந்திய அளவிலான பரந்து நிற்கும் சந்தையில் விளைபொருட்கள் விற்பனை குறித்தும் விவசாயிகளிடையே உரையாடினார்.
மேலும் விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை கோட்ட உதவி மின்பொறியாளர்களும், அலுவலர்களும் நேரில் கலந்து கொண்டனர்.சுமார் 201 விவசாயிகள் நேரில் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.