விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் சார்பில் 5 நாள் வேலைத் திட்டத்தை அமல் படுத்துதல், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலைத் திட்டத்தை அமல்படுத்துதல், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல், பொதுத் துறையை தனியார் மயமாக்கலை நிறுத்துதல், முன்னாள் ராணுவ வீரர் ஊழியர்களுக்கான ஊதிய நிர்ணயம் குறித்து விளக்கம் கொடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் சார்பில் பேங்க் ஆஃப் இந்தியா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளர் ராஜு தலைமையில் வட்டார செயலாளர் மணிவண்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், துணை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
செய்தியாளர் : அ.மணிகண்டன், விருதுநகர்.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.